Breaking News

ராஜபக்சக்களின் சொத்துக்கள் குறித்த விசாரணைகளில் இந்திய உதவி

மஹிந்த ராஜபக்சக்களின் சொத்துக்கள் குறித்த விசாரணைகளில் இந்திய உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் குறித்த விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் குறித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

ராஜபக்சக்கள் இந்தியாவுடன் மேற்கொண்ட வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் புது டெல்லி சென்றுள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் நிதி மோசடிப் பிரவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரவி செனவிரட்ன ஆகியோரும் இந்தக் குழுவினருடன் புதுடெல்லி சென்றுள்ளனர்.