Breaking News

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்ட இடத்தில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

இன்று காலை 9.25 மணிக்கு பிரதான சுடர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகள் மற்றும் பொதுமக்களால் சுடர்கள் ஏற்றி மலர் துவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் சுனாமி நினைவுத்துபி அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ந்நிகழ்வில் சுடர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் இரனைப்பாலை பங்குத்தந்தை மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம உத்தியோகத்தர்கள் அதிபர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உயிரிழந்தவர்களின் உறவுகள் நலன்விரும்பிகள் மக்களென பலரும் கலந்துகொண்டனர்.