Breaking News

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

காயமடைந்தவர்கள் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.