Breaking News

மஹிந்தவின் மாளிகையை இடித்துவிட்டு காணிகளை உரியவர்களிடம் வழங்கவும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வடக்கில் தனியாரது காணிகளை ஒன்றிணைத்து சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள மஹிந்த சொகுசு மாளிகையை இடித்துத் தள்ளிவிட்டு அந்தக் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

அதேபோன்று வடக்கில் இராணுவ வீரர்களின் தேவைகளுக்குதவும் தனியாரது காணிகள் எனத் தெரிந்திருந்தும் கடந்த ஆட்சியாளர்களால் பல சொகுசுக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் இடித்துத் தள்ளிவிட்டு காணி உரிமையாளர்களிடம் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே விஜயகலா இவ்வாறு கூறியுள்ளார்.