Breaking News

லலித், குகன் உயிருடன் இருக்கின்றனர் -கெஹலிய தெரிவிப்பு

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் உயிருடன் இருப்பதாக அப்போதைய ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

லலித் மற்றும் குகன் ஆகியோரின் உறவினர்கள் காணாமல் போதல் தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இருவரும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கெஹலிய அப்போது கூறியிருந்தார்.

இது தொடர்பில் நீதிமன்றில் விளக்கம் அளிக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. லலித் குகன் ஆகியோர் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரி உறவினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.