Breaking News

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது வரலாற்றின் கட்டாயம் - காந்­தியின் பேரன்

மித­வாத தமிழ்த் தலை­வர்கள் முறை­வ­ழி­யா­ன­வர்கள். அவர்­களின் புறக்­க­ணிப்பே பாரிய போரொன்­றுக்கு வழி­வ­குத்­தது. பொன்­னம்­ப­லங்கள், செல்­வ­நா­ய­கங்கள், திருச்­செல்­வங்கள் சகிப்­பு­ணர்வும் தொலை­நோக்கும் கொண்ட தலை­வர்கள். அவர்கள் வெறுத்துத் தள்­ளப்­ப­டா­விடின் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் தேவை ஏற்­பட்­டி­ராது.இலங்கைத் தமி­ழரின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வது விருப்­பு­ரி­மை­யல்ல. வர­லாற்றின் கட்­டாயம் என்று மகாத்மா காந்­தியின் பேரனும் இலங்­கைக்­கான இந்­திய முன்னாள் தூது­வ­ரு­மான கோபால கிருஷ்ண காந்தி தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று ஓராண்டு பூர்த்­தியை முன்­னிட்டு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற நிகழ்வில், பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தமிழில் அரிசி அளக்கும் சிறிய அள­வை­யான ஆழாக்குக் குறித்த வழக்கு உண்டு. அது தனது உருளை வடி­வுக்கு கிழக்கு மேற்­குள்­ளது என்று கற்­பனை செய்து புன்­னகை செய்­கின்­றது. சிறிய ஆழாக்­குக்கு கிழக்கு, மேற்கு இருக்­கின்­றதோ இல்­லையோ தீவு­க­ளுக்கு சுவை­யுண்டு. இலங்­கைக்கும் அவை உண்டு. இடங்கள் வழிகள் சார்­பா­ன­வையே திசை­காட்­டிகள். இன்று இலங்கை தனது செல்­வ­ழியை உணர்ந்­துள்­ளது. மக்கள் அதற்குக் காட்­டிய வழியில் அது நிதா­ன­மாக முன்­னே­று­கின்­றது.

இலங்­கையின் பல்­வட்ட வடி­வி­லான தேசிய ஒற்­றுமை, அரசின் முத­லா­வது ஆண்டு நிறைவை ஒட்டி எனது மகிழ்­வு­ட­னான பாராட்டைத் தெரி­விக்­கின்றேன். அதன் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்­கிற்கும் எனது வளரும் பருவ காலத்தை அதன் அருள் நிழலில் கழித்த தலதா மாளிகை இலங்கும் மலை­ய­கத்­துக்கும் எனது மகிழ்ச்சி மிக்க பாராட்டைத் தெரி­விக்­கின்றேன்.

ஜனா­தி­பதி அவர்­களே, உங்கள் நிறை­வேற்றும் சுக்கான் பிர­த­ம­ருடன் நீங்கள் தலைமை தாங்கும் அரசு, சகல திசை­க­ளையும், மத்­தி­யி­லுள்ள புனித மையப்­ப­கு­தி­யையும் ஒன்­றி­ணைத்­துள்­ளது. அதை­விட இன்­னமும் அதி­க­மாக அது நிறை­வேற்­றி­யுள்­ளது. அடை­ய­மு­டி­யா­தென ஒதுக்­கிய ஒன்றைத் தொலை­நோக்­குடன் கூடிய முதிர்ந்த மக்­களின் நல்­லெண்­ணத்தால் இய­லு­மென அது தெற்­கா­சி­யா­வுக்குக் காட்­டி­யுள்­ளது. மாண்­பு­மிக்க சீமாட்­டி­களே, சீமான்­களே அதுதான் பயத்­துக்குப் பதி­லீ­டாக நம்­பிக்­கை­யையும் சந்­தே­கத்­துக்குப் பதி­லீ­டாக நம்­பிக்­கை­யையும் வைத்­த­மை­யாகும். பாரம்­ப­ரி­ய­மாக எதிர்த்­து­ரு­வங்­க­ளா­க­வி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் மாம­ரத்தில் இளநீர் காய்ப்­பது போல ஒன்று சேர்த்­துள்­ளனர். இது திருத்த முடி­யாத குறை கூறு­ப­வர்கள் மட்­டு­மல்ல, அனு­ப­வஸ்­தர்­க­ளாலும் கவி விசித்­தி­ர­மாகப் பார்க்­கப்­பட்­டது. இதனால் பழிக்குப் பதி­லாக நல்­லி­ணக்கம். பிரி­வி­லி­ருந்து பேச்­சு­வார்த்தை போரி­லி­ருந்து சமா­தானம் சாவி­லி­ருந்து வாழ்வு என்­பன முகிழ்ந்­தன. ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு அடுத்த படி­யாக "போரும் சமா­தா­னமும்", "வாழ்வும் சாவும்" ஆகிய சொற்­கூட்­டங்கள் உண்மை வடி­வெ­டுத்­தது இலங்­கை­யி­லேயே, இந்­நாட்டின் எண்­ணற்ற மக்­களை சாவில் உறை­ய­வைக்கும் கரத்தின் ஸ்பரி­சத்தை உணர்த்­தி­யது மட்­டு­மன்றி தங்கள் அவ­யங்­களில் தலை­களைத் தாங்­கி­யி­ருந்­தார்கள். இப்­போதும் இருக்­கின்­றார்கள். சிலர் ஆபத்தை விலைக்கு வாங்கும் பொது­வாழ்வில் உழல்­கின்­றனர். வேண்­டு­மென்றே இச் சொல்லை தான் பாவிக்­கின்றேன்.

அவர்­க­ளது தீரத்­துக்கும், கூர்ந்த மதிக்கும் நான் சலாம் செய்­கின்றேன். இலங்கை மக்­க­ளுக்குக் கிட்­டிய ஓய்வில் நானும் பங்கு கொள்­கின்றேன். சென்ற வருடம் இலங்கை பயங்­க­ர­மான படு­பா­தாள விளிம்பில் தள்­ளா­டி­யது. அதன் மக்கள் தங்கள் தாய­கத்தை விளிம்­பி­லி­ருந்து பின் தள்­ளி­யுள்­ளனர். அவர்கள் பரஸ்­பர ஐயு­ற­வி­லி­ருந்து உயர்ந்து செல்லும் நம்­பிக்­கையின் பால் அதைக் கொண்டு வந்­துள்­ளனர். 

கூட்­டுக்குள் சந்­தர்ப்­ப­வாதம் போன்று பழைமை வாய்ந்­தவை. அர­சியல் இணைப்­புக்கள் தந்­தி­ர­மா­னவை. இவ்­வா­றான இணைப்­புக்கள் கண­நே­ரத்தில் நொருங்கி முறிந்­தது, தென்­னா­சி­யா­விற்குப் புதி­தான ஒன்­றல்ல. நம்­பிக்­கை­யென்னும் விட­யத்தில் அவர்கள் மழ­லையர் பள்­ளி­க­ளி­லேயே உள்­ளனர். இலங்கை வீழ்த்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பெயர்­போ­னது. கை செய்­வதை முகம் மறைக்கும் நட­வ­டிக்­கை­களும் இருந்­தன. ஆனால், நம்ப முடி­யாத அளவில் ஒரு வரு­டத்­திற்கு முன்பு தன்­ன­லத்­து­ட­னான அகம்­பா­வத்தை வெட்­டிச்­ச­ரிக்கும் செயல் இடம்­பெற்­றது.

இதைச் செய்­த­வர்கள் ஆபத்தை விலைக்கு வாங்­கினர். இது நம்­பிக்­கையால் சாத்­தி­ய­மா­னது. இந்த நம்­பிக்கை வீண­டிக்­கப்­பட்­டி­ருந்தால் அர­சியல் எதிர்­கா­லத்தை விடப் ­பா­ரிய அள­வி­லான வீழ்ச்சி ஏற்­பட்­டி­ருக்கும். ஜனா­தி­பதி சிறி­சேன, பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இந்த இடர்­மி­குந்த பாதையில் பய­ணிக்கும் போதும் தோல்­விக்கும் தயா­ரா­கவே இருந்­தனர். இன்று லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் இறப்பை நினை­வு­கூரும் அஞ்­ச­லி­தினம். இதை­விட மேல­தி­க­மாக நான் நினை­வு­ப­டுத்த வேண்­டுமா.? இதில் இவர்கள் இறங்­கும்­போது எதிர்­காலம் வலிமை மிக்­கதா? கேலிக்­கூத்தா? என வருமுன் நினைக்­க­வில்லை. 

நம்­பிக்­கையை முன்­னி­றுத்தி இம் மூன்று தலை­வர்­களும் அவர்­களைப் பின்­பற்­று­ப­வர்­களும் சட்­டங்­களை மட்டும் மாற்­றி­ய­மைத்தல் போதாது, உற­வு­களைச் சீர்ப்­ப­டுத்­துதல் வேண்டும் என்ற நோக்­குடன் செயற்­பட்­டனர். நம்­பிக்கை விசித்­தி­ர­மா­னது. அது செயற்­பட்டால் உயர்ந்­த­தா­கவும் தோல்வி கண்டால் மூடத்­த­ன­மா­ன­தா­கவும் கணிக்­கப்­படும். அர­சி­யல்­வாதி துடுப்­பாட்ட வீரர் போன்­றவர்.

இந்­தி­யாவில் மூளை குறைந்த அர­சி­யல்­வா­தியை காது­நீண்ட நாற்கால் பிரா­ணிக்கு ஒப்­பி­டு­வார்கள். நம்­பிக்­கை­யுடன் சோத­னையில் இறங்­கிய இவர்கள் இப்­பி­ரா­ணி­யுடன் ஒப்­பி­டப்­படும் இடரை அலட்­சி­யப்­ப­டுத்­தி­னார்கள். தங்­க­ளுக்குள் சம­மாக இந்த இடரை பகிர்ந்து கொண்­டார்கள். அவர்கள் அவ­ச­ர­மாக துணி­வுடன் செயற்­பட்­டார்கள். தெரி­யாத விதியின் கோலங்­க­ளுடன் மதி­யுடன் செயற்­பட்­டனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை தூர எறிந்­து­விட தங்­க­ளது நஷ்­டத்­துக்கு விதி­களை மாற்ற தங்­க­ளது சொந்தச் செல்­வாக்கைத் தகர்க்க தேர்­தலில் ஈடு­ப­டு­வோர்கள் எத்­தனை பேர்? தங்­க­ளது எதி­ரா­ளி­களின் விரோ­தத்தைப் பற்றிச் சிறி­த­ள­வேனும் கவ­லைப்­ப­டா­த­வர்கள் யாரா­வது இருக்­கின்­றார்­களா? அவர்கள் முற்று முழு­தாகச் சரி­யென நிரூ­பித்­துள்­ளனர். 

ஒரு­வ­ரு­டத்­துக்கு முன் தேசத்தின் புகழை உயர்ந்த சகல மொழி பேசு­ப­வர்­களும் சமயம் சார்ந்­த­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டனர். அதனால் தெளி­வாக பிசி­றில்­லாமல் நம்­பிக்­கையைப் பலப்­ப­டுத்­தினர். அவர்கள் குறு­கிய மனப்­பான்­மையை இறுக்­கிப்­பி­டித்து புறந்­தள்­ளிய பிறகு பார்க்­கலாம் என்­றனர். அவர்கள் சென்ற காலத்தை மறக்­க­வில்லை. ஆனால், அதி­லுள்ள ஐயு­றவை நீக்­கினர். அவர்கள் பேதங்­களை மறுக்­க­வில்லை. விட்­டு­வி­ல­கலை வழக்­கற்றுப் போகச் செய்­தனர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்­டு­மென்­பது விதி. முள்ளின் வேலை முடிந்­த­வுடன் புண்ணை ஆற்ற வேறோர் சிகிச்சை தேவைப்­படும். இலங்கை மக்­களை முரண்­பாட்டு முள்ளை அல்­லது நல்­லி­ணக்க அறு­வ­டையைத் தெரிவு செய்யும் படி விதி கேட்­டது. 

அவர்கள் நல்­லி­ணக்க அறு­வ­டை­யையே விரும்பித் தெரிந்­தனர். தேர்தல் நுண்­ண­றி­வி­லி­ருந்து கிடைத்த நாக­ரி­கத்தைக் கொண்­டா­டு­கின்­றனர். ஓராண்டு கால ஆட்­சியில் தனி­யு­ரிமை தகர்ந்­தது, அர­சியல் காட்டம் அகன்­றது. ஐயு­றவு ஓடி­ம­றைந்­தது. பேராசை நிர்க்­க­தி­யா­னது இதுதான் இந்­தியா உட்­பட்ட முழுத் தெற்­கா­சி­யா­விற்­கான இலங்­கையின் படிப்­பினை. இள­மையில் கல்வி சிலைமேல் எழுத்துப் போன்­றது. அதனால் தான் பல தமிழ் மேற்­கோள்­களைப் பாவிக்­கின்றேன்.

முள்ளை முள்ளால் எடுக்­க­வேண்­டு­மென்­பது ஒரு தமிழ் முது­மொழி. நாளைக்­கான பதில் என்ன? இன்று செய்­வ­து தான் நாளை விளையும். ஓர் இந்­தியன் அறி­வுரை வழங்­கு­வதை தனது பிறப்­பு­ரி­மை­யாக பிறப்பின் கட­மை­யாக, தனது அற இயக்­க­மாகக் கொள்­கின்றான். எங்கும் அவன் எதையும் கேளாது அறி­வுரை வழங்­கு­வ­தில்லை. பின்­னிற்­ப­தில்லை. இங்கு சொல்­வதை சில மாற்­ற­மை­வு­க­ளுடன் இந்­தி­யா­விலும் சொல்வேன். இலங்கை மக்கள் தங்கள் கட­மையைப் பிர­யோ­கித்­துள்­ளனர். பொரு­ளா­தா­ரத்தை சீர்­செய்தல், தொழில் பிறப்­பாக்கல், தங்கள் சந்­தித்த குழ­று­ப­டி­களை களைந்து குடி­ய­ரசை நிமிர்த்தல் போன்ற ஆயிரம் பிரச்­சி­னை­களின் சவாலைத் தேசிய நல்­லி­ணக்க அரசு எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இப்­பி­ரச்­சி­னைக்கு இவ் அரசு தனது மேலான கவ­னத்தைத் தரும்.

இருப்­பினும் இக் குடி­ய­ரசின் முதன்மை வரை­யறை செய்யும் அஸ்­தி­வார முன்­னு­ரிமை இத் தேசத்தில் உள்ள முக்­கிய இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை நிலை­நி­றுத்தி ஒன்­று­ப­டுத்­த­லே­யாகும். இது அரசின் அவர்கள் குறித்த மனப்­பான்­மையை நேர்மை நியா­யத்­துடன் பேணு­வதன் மூலமே சாத்­தி­ய­மாகும். பத­வி­யி­லுள்ள ஜன­நா­ய­க­வா­திகள் பிரச்­சி­னை­யொன்றை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. அவர்கள் திட­மா­ன­வர்­க­ளாக இருக்­கலாம். 

ஆனால், கொடு­மைக்­கா­ரர்­க­ளாக மாறுதல் கூடாது. பிழை செய்­ப­வர்­களை மேலும் பிழை செய்­யத்­தூண்­டாமல் அவர்கள் விதி­களைப் பின்­பற்­றுதல் வேண்டும். பிழை செய்­த­வர்கள் தொடர்­பாக அவர்கள் பெருந்­தன்மை காட்­டுதல் வேண்டும். ஆனால், பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்­டு­மெ­னவே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர். நல்ல தலைவர், சாமர்த்­தி­ய­முள்­ள­வ­ரா­கவும் இருப்பார். குறு­கிய காலத்­துக்­கன்றி நீண்­ட­கா­லத்­துக்கு இது­வேண்டும்.

தான் வாழும் குறு­கிய காலத்தில் ஜன­நா­ய­கத்தின் எதிரி, ஜன­நா­ய­கத்தில் வன்­மு­றையைக் காட்­டுவோர், குடி­மக்­களின் சுதந்­திரம் மனித உரி­மைகள் என்­ப­வற்­றுக்­கெ­தி­ரான செயல்­களைச் செய்­வார்கள். கொலை உட்­பட பல குற்­றங்­க­ளையும் செய்­து­விட்டுத் தப்­பி­வி­டு­வார்கள்.

இந்த நல்­லொ­ழுங்கை கொண்­டாட அழைக்­கப்­பட்­டவர் முன்­னைய அர­சாங்­கத்­தையோ அல்­லது அதன் தலை­வ­ரான மஹிந்த ராஜபக் ஷவையோ விமர்­சிப்­பது நல்­ல­தல்ல. உலகின் மிகக் கொடிய பயங்­க­ர­வா­தத்தை இல்­லாது செய்த அவரைச் சரித்­தி­ரத்தின் ஏடுகள் மறவா. ஆனால், ஒரு பாவ­மு­ம­றி­யா­த­வர்­களின் படு­கொ­லைகள் நிச்­ச­ய­மாக நிந்­த­னைக்­குட்­பட்­டவை. தந்தை பயங்­க­ர­வா­தத்தைப் பரப்­பி­யவர் என்­ப­தற்­காக மகனை உயி­ரி­ழக்கச் செய்­வது நியா­யத்­துக்­கப்­பாற்­பட்­டது. சகோ­தரக் கொலைக்­கான கசப்­பான யுத்தம் இலங்­கையில் முடி­வ­டைந்த போதிலும் சமா­தானம் ஓடி ஒழிந்­தது. துவக்­குகள் மௌனித்­தன ஆனால் பேச்­சு­வார்த்­தையும் பதுங்­கி­யது. 

வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் சரித்­தி­ர­மானார். ஆனால் அவ­ரது இலக்கு சரித்­தி­ர­மா­னதா? திரும்­பவும் தனது தலையை நிமிர்த்­து­வ­தற்­காக அது ஒளிந்­துள்­ளதா? குறிக்­கோள்­களைத் திட்­ட­மாக்க, திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த, நடை­மு­றை­களின் பணிப்­ப­யன்­களைப் பெறுதல் என்­பன ஏமாற்­றங்­க­ளையும் திகைப்­புக்­க­ளையும் சந்­திக்­க­வேண்­டி­யுள்­ளன. நட­வ­டிக்கை சீர்­செய்­தலை உள்­ள­டக்­கு­மாயின் அளப்­ப­ரிய அளவில் சகிப்­புத்­தன்மை வேண்டும். தீர்வைச் சாக­டிக்கும் தொழில் முறை­யாளர் நிறை­யப்பேர் உள்­ளனர். 

அவர்­க­ளது இலக்கு குழப்­பத்தை விதைப்­பதே. அவர்­க­ளது குறி சட்ட மீறு­கைகள். நாகம் புடை­ய­னுடன் ஒன்று கலந்தால் விளைவு எது­வு­மில்லை. ஆனால், பணம் அதி­கா­ரத்­துடன் சல்­லா­பிக்­கும்­போது வாய்­தி­றக்க முடி­யாத நிலை­மை­களே உரு­வாகும். அதி­காரப் பகிர்வைத் தவிர்க்க எந்தச் சக்­திக்கும் இலங்கை இடங்­கொ­டுக்­காது. நட்ட ஈடு வழங்­கு­ப­வர்­க­ளது திருப்­தி­யல்ல பெற்­ற­வர்­க­ளது திருப்­தியே முக்­கியம். இலங்கைத் தமி­ழரே இட­றாத விதியின் ஏற்பை வெளிப்­ப­டுத்­த­வேண்டும்.

மித­வாத தமிழ்த் தலை­வர்கள் முறை­வ­ழி­யா­ன­வர்கள். அவர்­களின் புறக்­க­ணிப்பே பாரிய போரொன்­றுக்கு வழி­வ­குத்­தது. பொன்­னம்­ப­லங்கள், செல்­வ­நா­ய­கங்கள், திருச்­செல்­வங்கள் சகிப்­பு­ணர்வும் தொலை­நோக்கும் கொண்ட தலை­வர்கள். அவர்கள் வெறுத்துத் தள்­ளப்­ப­டா­விடின் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் தேவை ஏற்­பட்­டி­ராது. பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து தப்­பிய தமிழ்த்­த­லை­வர்­களை நாங்கள் மறக்­கக்­கூ­டாது. 

ஒன்­றி­ணைந்த இலங்­கைக்­காகப் பாடு­பட்ட சகல தமிழ்த்­த­லை­வர்­களும் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து தப்­பி­ய­வர்­களே. இது ஒரு அதி­ச­யந்தான். அவர்­க­ளது தோற்றம் சகிப்­புத்­தன்­மையின் திட­காத்­தி­ரத்தைப் பறை­சாற்­று­கின்­றது. முன்­னைய விசச் சூழல் திரும்பி வரக்­கூ­டாது. இலங்கைத் தமி­ழரின் அபி­லா­ஷைகளை நிறை­வேற்­று­வது விருப்­பு­ரி­மை­யல்ல. வர­லாற்றின் கட்­டாயம். புலம்­பெயர் தமி­ழர்­களின் ஈழம் கோரிக்­கை­யா­னது மன­மார ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் இலங்கை கால் பதித்­துள்­ளது. பிரி­ப­டாத ஒற்­றை­யாட்­சியில் சமஷ்டி சார் விட­யங்­களை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு இயற்­றப்­ப­டுதல் வேண்டும். 1987இன் இந்­திய - இலங்கை இணக்­கப்­பாட்டின் 13ஆவது திருத்­தத்­து­ட­னான தீர்வு பெறு­மதி மிக்­க­தாகும். இந்­தி­யாவைப் போன்ற பெறு­மதி மிக்க நண்பன் இல்­லை­யென்­பதால் இதுவே உசி­த­மான வழி­யாகும்.

மத்தி, மாநிலம் என்­ப­வற்­றுக்­கி­டை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்வு ஆணித்­த­ர­மான அவ­சி­ய­மாகும். இதில் யார் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும்? பெரும்­பான்­மை­யல்ல. பகுத்­த­றி­தலே. ஆனால் அர­சியல் நாக­ரிகம் கிட்­டு­கின்­றது. சமிக்­ஞைகள் முக்­கி­ய­மா­னவை. மகாத்­மா­காந்தி சுட்­டிக்­காட்­டி­ய­தற்குப் பத்து வரு­டங்கள் முன்பே முகம்­மது அலி ஜின்­னா­வுக்குப் பிர­த­ம­மந்­தி­ரி­யாகப் பத­வியும், அம்­பேத்­க­ருக்குத் ராஷ்­டி­ர­பதி அல்­லது உப ராஷ்ட்­டி­ர­பதிப் பதவி கிடைத்­தி­ருந்தால் இந்­தி­யாவின் வர­லாறு வேறாக இருந்­தி­ருக்கும். இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யா­கவோ அல்­லது பிர­த­ம­ரா­கவோ தமிழர் ஒருவர் இருந்­தி­ருந்தால் இலங்கை பாரிய இடுக்­கண்­களைச் சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டி­ராது. ஒரு தெற்­கா­சி­ய­னாக இலங்கைத் தமிழர் ஒருவர் நமோ நமோ மாதாத் தேசிய கீதம் கிடைக்­கும்­போது இத்­த­கைய பத­வி­யொன்றைப் பெறு­வ­தைப்­பார்க்க அவா­வு­று­கின்றேன்.

நெல்சன் மண்­டேலா தனது மந்­தி­ரி­ச­பையில் அதி­க­ள­வி­லான இந்­தியன் தென்­னா­பி­ரிக்­கர்­களைச் சேர்ந்­த­போது விச­ன­முற்­ற­வர்­க­ளுக்கு அவர் சொன்ன பதில் "இது அவர்­க­ளது ஈடு­பாட்டைப் பொறுத்­தது" என்றார். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இது ஒரு பாட­மாக அமையும். “வானவில் தேசத்தின்" உரு­வாக்­கத்­துக்குப் பங்­க­ளிப்புச் செய்த அளவின் படி சிறுபான்மைப் பிரதி நிதித்துவம் அமைச்சரவையில் இருத்தல் வேண்டும். சிங்களம் பேசும் இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை போல் தமிழ் பேசும் சிங்களவர்களது எண்ணிக்கை இல்லாதது ஏன்? கொல்வினின் "ஒரு மொழி இரு நாடுகள்", "ஒரு நாடு இரு மொழிகள்" என்ற கோட்பாட்டையும் என்.எம்.பெரேராவின் ஒரு மேலான இனம் என்றில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளாததேயாகும். நான் கறுப்பு இனவாதத்துக்கும் எதிரானவன் என்று மண்டேலா சொல்லியுள்ளார்.

ஒரு இலங்கைத் தமிழன் சிங்கள பேரினவாதத்துக்கு எதிரானவன் என்று பொருளுண்டு. அவர் தான் தமிழ்ப் பேரினவாதத்துக்கு எதிரானவன் என்று அவரால் சொல்ல முடியுமா? இலங்கைத் தமிழர்கள், மலைநாட்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய வர்களே. இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு நல்லாட்சியைத் தரும். இலங்கைத் தமிழர் பெரும்பான்மையென்பது நச்சுத்தன்மையானது என எண்ணுதல் தப்பாகும்.

சிறுபான்மையினர் நீதியை எதிர்பார்க்கும்போது மனித உரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் குறைவான எண்ணிக்கையை கண்டு தடுமாறக்கூடாது. இந்தியன் தலித்துக்கள் முஸ்லிம்கள் போல முழுமையானவர்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களைக் கருத வேண்டும். பயங்கரவாதத்துக்கூடாக ஈழ த்தை அடைவது பகற்கனவாகிவிட்டது. இந்நிலைமாறி பேச்சுவார்த்தை நிலை ஏற்பட்டது. எனது உரையை நிறைவு செய்யுமுன் ஒரு வினா எழுப்ப விரும்பு கின்றேன். கண்டம் என்றால் என்ன தீவு என்றால் என்ன? கண்டம் பெரிய தீவே. இலங்கையைச் சிறிய தீவாக ஒருவரும் எண்ணவேண்டாம்.

பல ஆண்டுகளாக முரண்பாடு நிறைந்த இலங்கை நம்பிக்கை நிறைந்த தீவாக மாறியுள்ளது. அது ஒரு நம்பிக்கைக் கண்டமாக மாற விதி வழி செய்துள்ளது என்றார்.