Breaking News

‘சிங்க லே’ அமைப்பின் பின்னணியில் மஹிந்த - அஷாத் சாலி குற்றச்சாட்டு

‘சிங்க லே’ அமைப்பின் பின்னணியில் மஹிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் மஹிந்த குடும்பம் தற்போது ஈடுபட்டுள்ளது.

‘சிங்க லே’ அமைப்பின் பின்னணியிலும் இவர்களே உள்ளனர். இவர்கள் இதுதொடர்பில் முன்னமே திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில் திட்டமிட்டதனை தற்போது செயற்படுத்தி வருகின்றனர்.

மேலும், மஹிந்தவுடன் மைத்திரி இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.