அதிகாரப்பகிர்வு தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு
அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் சந்தர்ப்பத்தில் சுவிஸ்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு, கருத்தரங் கொன்றை இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடாத்தியுள்ளது.
குறித்த கருத்தரங்கானது யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிஸ்லாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தியிருந்தனர்.
அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள் என்பது இந்தக் கருத்தரங்கின் கருப்பொருளாக அமைந்திருந்தது.
இந்த கருத்தரங்கில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி சிவஞானம் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.










