Breaking News

தமிழரசுக் கட்சி-மங்கள சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீரவுக்கும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்றுநேற்றையதினம் யாழ் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தழிழரசுக் கட்சி யின் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்தில் நல்லிணக்கம் மற்றும் ஆலோசனைக்கான இணையத்தளம் அறிமுகப்படுத்தலும் அது தொடர்பாக சிவில் சமூகத்தினரின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்துக்கு வருகை தந்த அமைச்சர், நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இக் கலந்துரையாடலில் தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சரவணபவன், முன்னாள் வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.