Breaking News

இவ்வாரம் முக்கிய பிரமுகர்கள் கைதாவர்

கடந்த ஆட்­சியின் முக்­கிய பிர­மு­கர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் சட்­ட­பூர்­வ­மாக முடி­வ­டைந்­துள்ள நிலையில் இவ்­வாரம் பல பிர­மு­கர்கள் கைது செய்­யப்­ப­டலாம் என சர்­வ­தேச வர்த்­தக மற்றும் முத­லீ­டுகள் ஊக்­கு­விப்பு இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியைப் போன்று "லஞ்சம்" பெற்றுக் கொண்டு வெளிநா­டு­க­ளுடன் எமது அரசு உடன்­ப­டிக்­கை­களை செய்து கொள்­ள­வில்லை என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கை யில்,

இந்­தி­யா­வு­ட­னான தொழில்­நுட்பம் மற்றும் வர்த்­தகம் தொடர்­பான (எட்கா) உடன்­ப­டிக்கை தொடர்பில் தற்­போது பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்பில் எமது நாட்டின் கல்­வி­யா­ளர்கள், தொழில்சார் நிபு­ணர்கள், சிவில் அமைப்­புக்கள் உட்­பட பல தரப்­புக்­க­ளி­னது ஆலோ­ச­னைகள் மற்றும் கருத்­துக்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்டு வ௫­கின்­றன.

இலங்­கைக்கு பொரு­ளா­தார நன்­மை­களை பெற்றுக் கொள்ளும் விதத்­தி­லேயே இந்­தி­யா­வு­ட­னான (இட்கா) உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும். இந்த உடன்­ப­டிக்­கை­யா­னது இலங்­கையில் வெ ளிநாட்டு முத­லீ­டு­க­ளுக்­கான ஒரு நுழை­வா­யி­லா­கவே அமையும். அதை­வி­டுத்து எமது நாட்டின் மனித வளத்­துக்கோ அல்­லது தொழிற்­துறை வளத்­துக்கோ பாதிப்பு ஏற்­படும் விதத்தில் எதுவும் அமை­யாது.

இது தனிப்­பட்ட ரீதி­யான அல்­லது அர­சியல் ரீதி­யான உடன்­ப­டிக்­கை­யல்ல. நாட்டின் ஏற்­று­ம­தியை அதி­க­ரித்து தேசிய உற்­பத்­தியை ஊக்­கு­வித்து, பொரு­ளா­தார ரீதியில் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வது குறித்தும் அரசின் 10 இலட்சம் தொழில் வழங்கும் திட்­டத்தை நடை­முறை சாத்­தி­ய­மாக்­கு­வது தொடர்­பிலும் கவனம் செலுத்­தியே இவ்­வா­றான திட்­ட­ங­களை முன்­னெ­டுக்­கின்றோம். இந்­தி­யா­வுடன் மட்­டு­மல்ல பல நாடு­க­ளு­டனும் வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ள­வுள்ளோம்.

பிரமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம அகியோர் நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டே செயற்­ப­டு­கின்­றனர். குறு­கிய அர­சியல் நோக்­கங்கள் கிடை­யாது. உலக மய­மாக்கல் பொரு­ளா­தார யுகத்தில் எம்மால் தனித்து இயங்க முடி­யாது. கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் இலங்­கையை உல­கி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

எனவே தான் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இலங்­கையின் ஏற்­று­மதி 34 வீதம் குறை­வ­டைந்­தது. வெ ளிநா­டு­களில் அதிக வட்­டிக்கு கடன்­களை வாங்கி நாட்டை கட­னுக்குள் தள்­ளி­விட்­டனர். இந்த சுமைகள் அனைத்தும் மக்கள் மீது சுமத்­தப்­பட்­டன.

அது மட்­டு­மல்­லாது வெ ளிநா­டு­க­ளுடன் உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­படும் போதும், வெ ளிநா­டுகள் இங்கு முத­லீ­டு­களை மேற்­கொள்ள முயற்­சித்­த­போதும் அவர்­க­ளிடம் இலஞ்சம் கோரப்­பட்­டது. இன்­றைய நல்­லாட்­சியில் இலஞ்சம், ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­மில்லை. நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் நன்மை கரு­தியே அனைத்து உடன்­ப­டிக்­கை­களும் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­ப­டு­கின்­றன. நாங்கள் இலஞ்சம் பெற­வில்லை.

இந்­தி­யா­வு­ட­னான (இட்கா) உடன்­ப­டிக்கை இலங்­கைக்கு சாத­க­மா­ன­தா­கவே ஏற்­ப­டுத்­தப்­படும். இன்று அர­சியல் இலாபம் தேடும் மஹிந்­தவும், அவ­ரது கூட்டாளிகளும் இவ் உடன்படிக்கை தொடர்பான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

நிதிக் குற்றம் தொடர்பான விசேட பிரிவு (எப்.சி. ஐ.டி) கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட பலரது விசாரணைகளை சட்டரீதியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இவ்வாரத்தில் பல பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்றார்.