Breaking News

இளவாலை பகுதியில் விபத்து - ஒருவர் பலி


யாழ் – இளவாலை பகுதியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பெரியவிளானிலிருந்து தெள்ளிப்பளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த நபரை தெள்ளிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொறு நபர் காயமடைந்த நிலையில் தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்