Breaking News

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு - அரசாங்கத்தின் சதி என்கிறார் சிவாஜி


யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் சதிசெய்யும் குழுவினர் தொடர்புபட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தினார்.

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 118ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்வு இடம்பெற்றது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒன்றிணைகிறார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது பழியைச் சுமத்தி துன்புறுத்தும் ஒரு நாடகமே அரங்கேற்றப்பட்டிருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.