என் கல்லறையே என்னை மன்னிக்காது
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வு டன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்த மத்திய அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழ் இனத்தை அழிக்க காரணமாக இருந்தது. ஒரு இன அழிவுக்கு காரணமானவர் கருணாநிதி. அவரது இயக்கத்துடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? அப்படி நான் அவரது இயக்கத்துடன் உறவு வைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது.
தமிழ் இனத்துக்கே கேடு விளைவித்தவர்கள் மகளிர் உரிமை மாநாடு போடுகிறார்கள். தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. மது கோரத் தண்டவமாடக் காரணமே அவர்தான். கருணாநிதிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மது விற்பனையை தமிழகத்தில் பரவலாக்கினார்கள்.
மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை நிச்சயம் அமுல்படுத்துவோம். மது வின் கொடுமையிலிருந்து தமிழகத்தை மீட்கவேண்டுமெனில் மக் கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் .








