வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருகோணமலைக்கு இடம் மாற்றம்!
வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் வவுனியாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.
பிரதம நீதியரசரின் உத்தரவுக்கமைய இடம்பெற்றுள்ள இந்தத் திடீர் இடம் மாற்றம் 20 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








