Breaking News

தாஜுடீன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஸ்ரீலங்கா ரக்பி அணியின் முன்னாள் வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கில் ஒய்வுபெற்ற உயர்நிலை பொலிஸ் அதிகாரி அரச தரப்பு சாட்சியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் குறித்த அதிகாரி சட்ட அமுலாக்கல் அதிகாரிகளை நாடியுள்ளதாக ஸ்ரீலங்காவின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த விடயத்தில் பொலிஸார் இறுதித் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் பொலிஸ் சேவையில் மிகவும் உயர்ந்த பதவியை வகித்த குறித்த அதிகாரி தாஜுடீன் கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலிடத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய தாஜுடீன் கொலை தொடர்பான மேலதிக வழக்கு விசாரணையை தவிர்த்துக்கொண்டதாக முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கூறியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் அண்மையில் அறிவித்திருந்தனர்.