Breaking News

விசாரணையில் இறங்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவு?

சாவகச்சேரி – மறவன்புலவில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  இராணுவப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வெடிபொருட்களை  காவல்துறையே கண்டுபிடித்திருந்தது. அத்துடன், இந்த விசாரணைகளை  காவல்துறையே மேற்கொள்ளும் என்றும், பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழக்கும் என்றும்  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கூறியிருந்தார்.

இந்த விசாரணைகளில்  இராணுவத்தினர் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.காவல்துறையின் தீவிரவாத விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே,  இராணுவத்தின் புலனாய்வுப் பணியகமும், இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.