Breaking News

தற்கொலை அங்கி தொடர்பில் சட்டத்தை கடுமையாக்குங்கள்- சம்பந்தன்



யாழ். சாவகச்சேரியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு யாருக்கும் இடமளிக்கக் கூடாதெனவும் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட வடக்கு மக்களுக்கு எந்தத் தேவையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்கள் பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் எனவும் அவர்கள் தற்பொழுது சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் அறிவிப்புச் செய்துள்ளதாக இன்றைய சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது