Breaking News

சிவாஜிலிங்கத்திடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை!



வடக்கில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக தன்னிடம் விசாரணை நடத்திய இரகசிய பொலிஸார், ஏன் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் விசாரணை நடத்தவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதன் பின்னரும், முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுகாப்பை நீக்கிக்கொண்டமையை ஏற்றுக்கொள்ள முடியாதென இதன்போது பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே தற்போது செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் பிரிஸ், பிரதமர் தமக்கு தேவையான வகையில் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்கி, தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்ததை மீறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.