Breaking News

மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித் தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் அனுப்பிவைத்துள்ள கடித்தத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து, முப்படைகளுக்கும் தன்னை செல்லவிடாமல் தடைப்பிறப்பிக்கப்பட்டுள்ளமை அரசியல் ரீதியிலான முடிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணினிப் பிரிவையும் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே, கடற்படை அதிகாரியை, முதலமைச்சர் திட்டித்தீர்த்தார். அவைத் தொடர்பிலான காணொளி, இணையத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.