Breaking News

மஹிந்தவின் உயிர் ஆபத்தில்..!!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதான இலக்கு ஆகும். எனவே அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

வன்னியிலுள்ள இராணுவ முகாம்களை பார்வையிட ஜ.நா.பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கபடுவதால் இறுதி யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பிரபல புலி உறுப்பினர்கள் விடுதலையாகும் சாத்தியங்கள் இருப்பாதாக தேசிய சுதந்திர முன்னணியி ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.