Breaking News

சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் இலங்கை தடுமாற்றம்

இறு­திக்­கட்ட போரின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க்குற்­றங்கள் குறித்து விசா­ரணை செய்யும் விசாரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் ஜெனீவா தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்ள நிலையில் தற்­போது நிலைமை நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


நிலை­மையைச் சீர் செய்­வ­தற்­காக முன் னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­­துங்க உள்­ளிட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உயர்மட்­டத்­தி­ன­ருக்­கி­டையில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 32 ஆவது கூட்­டத்­தொ­டரில் பொறுப்புக் கூறல் விட­யத்தில் இலங்­கையின் முன்­னேற்­றங்கள் குறித்து அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் பாராட்­டுக்­களை தெரி­வித்­தப்­போ­திலும் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தனர். அதா­வது இலங்­கையின் இறு­திக்­கட்ட போரின் போது நடைப்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்­றங்கள் தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டங்­க­ளான கலப்பு நீதி மன்­ற­மாக அமைய வேண்டும் என ஜெனீவா தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சேன கலப்பு நீதி மன்­றத்­திற்கு கடும் எதிர்ப்பை பல முறை வெளி­யிட்­டி­ருந்தார். மறுப்­புறம் வெளி­வி­வ­கார அமைச்சர் கலப்பு நீதி மன்­றத்தை ஆத­ரிக்கும் வகை­யிலும் நல்­லாட்சி இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் ஜெனீ­வாவில் தெரி­வித்­தி­ருந்தார். 

அதே போன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிலைப்­பாடும் ஜெனீவா தீர்­மா­னத்­திற்கு ஒத்­துப்­போ­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் மாறுப்­பட்ட நிலைப்­பா­டு­களும் கருத்து மோதல்­களும் மேலோங்­கி­யுள்­ளன. தான் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் வரையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திப்­ப­தில்லை என நேற்று முன்­தினம் பாணந்­துறை நக­ர­சபை விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் மேலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .