Breaking News

இந்தவாரம் இலங்கை வருகிறார் நிஷா பிஸ்வால்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.


மூன்று நாள் பயணமாக நிஷா பிஸ்வால் வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின் போது, அவர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, ஆராய்வதுடன், பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும்.