மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றார் இந்திரஜித் குமாரசாமி
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இலங்கை மத்திய வங்கியின் 14ஆவது ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.








