Breaking News

இராணுவத்தினருக்கு நவீன போர்த்தளபாடங்களை வழங்குகிறது ரஷ்யா



சிறிலங்கா படைகளுக்கு சில நவீன போர்த்தளபாடங்களை ரஷ்யா வழங்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தேசிய நாள் கொண்டாட்டம் அண்மையில், கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதன் விளைவாகவே, சிறிலங்கா படைகளுக்கு சில நவீன இராணுவத் தளபாடங்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவுடன் பல முக்கியமான இருதரப்பு உடன்பாடுகளில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளது. இதில், ரஷ்யாவின் தனித்துவ வடிவமைப்பிலான, சில முன்னோடி போர்த்தளபாடங்களை வழங்கும் உடன்பாடுகளும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.