வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியல் யாப்பில் இடமில்லை- வர்ணசூரிய
இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தாலும், அரசியல் யாப்பில் அவ்வாறு செய்வதற்கு எந்த அனுமதியும் இல்லையென சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளை நியமிப்பது அரசியல் யாப்பின் படி ஜனாதிபதியே ஆகும். ஐ.நா. கூறுவது போன்று சர்வதேச நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.
உள்நாட்டு நீதிபதிகளின் கீழ் இடம்பெறும் நீதிமன்றங்களைக் கண்காணிப்பதற்கும், அதற்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மாத்திரமே வெளிநாட்டு நீதிபதிகளிக்கு அழைப்பு விடுக்க முடியும் எனவும் சட்டத்தரணி சட்ட மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.








