மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் ; அதன் வெளிப்பாடே பாதயாத்திரை
தற்போழுது நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுமக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். எனவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம், ஆனால் அரசாங்கம் எம்மை முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டுவருகின்றது. பொதுமக்கள் ஆட்சிமாற்றத்தைவிரும்புகின்றனர். எமக்கு எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று பாதயாத்திரையில் கலந்துக் கொண்டுஅரசாங்கத்திற்கு எதிராககுரல் கொடுக்கின்றனர்.
எனவே மாற்றம் தேவை என்பது வெளிப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்ளபோராடவேண்டும். கொழும்பில் பாதயாத்திரை முடியும் போதுநாட்டின் அனைத்து மக்களும் எம்முடன் இருப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.