Breaking News

மகிந்த அணியின் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவு



சிறிலங்கா அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.

கண்டியில் தொடங்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை நான்காவது நாளான நேற்றுமாலை கிரிபத்கொடவில் முடிவடைந்தது. நிட்டம்புவ தொடங்கி கிரிபத்கொட வரை நேற்று நடந்த பாதயாத்திரையில், முன்னைய நாட்களை விட அதிகமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை கிரிபத்கொடவில் தொடங்கும் பாதயாத்திரை கொழும்பில் நிறைவடையும். இந்தப் பாதயாத்திரையின் முடிவில் கூட்டம் நடத்த பதிவு செய்யப்பட்ட மைதானத்தில் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுவதால், காலிமுகத்திடலில் பாதயாத்திரை முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகருக்குள் இன்று பாதயாத்திரை நுழையும் போது, அதில் பங்கேற்பவர்கள் குழப்பங்களை விளைவிக்கலாம் என்று கருதப்படுவதால், கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்தப் பாதயாத்திரையின் முடிவில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.