Breaking News

மன்னாரில் மற்றுமொரு மனிதப்புதைகுழி



மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டு 87 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன, அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மற்றுமொரு கிணறு ஒன்றே தற்போது தோண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.