நாடு பிரிபடக் கூடாது, மீண்டும் யுத்தம் வரவும் கூடாது - சம்பந்தன்
ஒரே நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சகல மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதுமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் மாத்தறையில் தெரிவித்துள்ளார்.
இராணுவம் நாட்டுக்கு அவகுசியம். நிதி மற்றும் குடிவரவு குடியகல்வு, வெளிவிவகாரம் என்பன மத்திய அரசாங்கத்திடம் காணப்படுதல் வேண்டும். நாட்டைப் பிரிப்பதற்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. யுத்தத்தினால் இழந்தது போதும். இனியும் யுத்தமொன்று இடம்பெறுவதற்கான வாயில்களை நாம் இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் அழைப்பின் பேரில் அவர் தென் மாகாண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.