Breaking News

ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்படுகிறது(காணொளி)

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப்
புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீரப்பை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம், அதற்காக முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் இந்த ஆலோசணையை வழங்கியிருக்கின்றார்.

இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கப்படும் என்றும் இந்த உத்தரவு இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் இன்றும் சட்ட நிபுணர்கள் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் மீதான தடைகளை தொடர்ந்தும் நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்தக் கோரிக்கைய ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றின் தலைமை சட்ட அதிகாரியான எலனோர் ஷாப்டன் பரிந்துரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கமம் இஸ்ரேலிய அரசும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த நிலையில் வழங்கப்பட்டுள்ள இந்த பரிந்துரை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரித்தானியா உட்பட 28 நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றின் தலைமை சட்ட அதிகாரியான எலனோர் ஷாப்டனின் பரிந்துரையை அமுல்படுத்துவது குறித்த விசாரணைகளை தாம் ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைமை சட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பயங்கரவாத தடைப் பட்டியலில் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இணைத்த அந்த ஒன்றியம் அந்த அமைப்பின் மீது தடை விதித்ததுடன் அதன் சொத்துக்களையும் முடக்கியது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பை ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அடிப்படையற்ற தகவல்களையும் கொண்டே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து ஐரோப்பிய உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்த புலம்பெயர் தமிழர்கள் குறித்தத் தடையை நீக்குமாறு கோரியிருந்தனர்.

இதற்கமைய 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையதற்கு வழங்கப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என தெரிவித்த ஐரோப்பிய உயர் நீதிமன்றம் தடையை நீக்குமாறு 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்றும் அதற்குத் தேவையான காரணங்களையும் தாம் வழங்குவதாக தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தை தடை நீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய தூண்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.