Breaking News

விக்னேஷ்வரன் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்



வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவரது அரசியல் நடவடிக்கைகள் தெற்கிலுள்ள இனவாத குழுக்களின் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

வட மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், விக்னேஷ்வரனின் இந்த நடவடிக்கை, தெற்கிலுள்ள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு தீனியாக அமைந்துள்ளதென்பதையும் அவர்களுக்கு அரசாங்கம் எடுத்துக் காட்டவுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், வட மாகாண முதலமைச்சரின் இந்த அடிப்படைவாத சிந்தனையுடன் கூடிய அறிவிப்புக்கள் நாட்டின் பலத்த எதிர்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பிலும் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.