Breaking News

தமிழர் முற்றுகையில் சிக்கியுள்ள மஹிந்த!



சுதந்திரக் கட்சியின் 65ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் கேக் வெட்டி மகிழ்வுடன் கொண்டாடினர்.

இதன்போது வருகைத் தந்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கேக் ஊட்டிவிடப்பட்டது.

ஊடகவியலாளர்களை அழைத்து டளஸ் அழகப்பெரும கேக் ஊட்டினார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வாழ்த்துச் செய்தியினையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அதே சமயம் கூட்டு எதிர்கட்சியினரால் வெட்டப்பட்ட கேக்கிலும் மஹிந்தவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

ஒருபக்கம் மஹிந்த சுதந்திரக்கட்சியை விட்டு மலேசியா சென்று விட்டார், அங்கு அவருக்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மறுபக்கம் மைத்திரி தலைமையில் சுதந்திரக்கட்சியின் 65ஆவது பூர்த்தி மாநாடு குருநாகலில் இடம்பெறவுள்ளது. இரண்டிற்கும் நடுவே கூட்டு எதிர்கட்சியினர் தனியாக மஹிந்தவின் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.