Breaking News

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும்



அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தாது தொடர்ந்தும் ஒத்திவைத்து வருவதால் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமை ச்சர் தெரிவித்துள்ளார்.