Breaking News

ஜனாதிபதியின் இரகசியங்களை ஒட்டு கேட்கும் மஹிந்த



முன்­னைய குடும்ப ஆட்­சியில் மேற்­கொண்ட ஊழல் மோச­டிகள் தொடர்பில் இர­க­சி­ய­மாக நட­வ­டிக்கைகள் எடுக்­கப்பட்­டாலும் ஜனா­தி­பதி இர­க­சி­ய­மாக எடுக்கும் நட­வ­டிக்­கைகள், ஒரு சில­ரது தனிப்­பட்ட விப­ரங்­கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழி­யி­லேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்­ற­டைந்து விடு­கின்­றன என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

ஆட்சி மாறி­னாலும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்­தபாய ராஜபக் ஷவிற்கு விசு­வா­ச­மான நபர்கள் இன்னும் அர­சாங்­கத்­திலும் அரச நிறு­வ­னங்­க­ளிலும் உள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை தெரி­விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

ஜனா­தி­பதி இர­க­சி­ய­மாக எடுக்கும் நட­வ­டிக்­கைகள், ஒரு சில­ரது தனிப்­பட்ட விப­ரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழி­யி­லேனும் மஹிந்த ராஜபக் ஷவை சென்­ற­டைந்து விடு­கின்­றன. ஆரம்­பத்தில் இருந்து இவ்­வாறு இர­க­சி­யங்­களை ஒரு­சிலர் மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்து வரு­கின்­றனர். 

ஆட்சி மாறி­னாலும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்­தபாய ராஜபக் ஷவிற்கு விசு­வா­ச­மான நபர்கள் இன்னும் அர­சாங்­கத்­திலும் அரச நிறு­வ­னங்­க­ளிலும் உள்­ளனர். 

ஜனா­தி­பதி மற்றும் ஒரு­சிலர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக ஏதேனும் நகர்­வு­களை எடுக்கும் போது அதை வெளிப்­ப­டுத்தி உண்­மை­களை மறைத்து விடு­கின்­றனர். 

அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்­பு­டைய விவ­காரம் தொடர்பில் இன்னும் அர­சாங்கம் வாய்­தி­றக்­க­வில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் ஜனாதிபதி­யுடன் தொடர்­பு­கொண்டு டுபாய் வங்­கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்து ள்ளனர் என்ற விப­ரத்தை பெறு­வ­தற்கு அனு­மதி பெற்றார். 

ஆனால் அவர் அவ்­வாறு செயற் ­பட்டு ஒரு­மணி நேரத்தில் மஹிந்தராஜபக் ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.