Breaking News

விஷ ஊசி தொடர்பில் 146 முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை



விஷ ஊசி விவ­காரம் தொடர்பில் ஐந்­தா­வது வார­மா­கவும் இடம்­பெற்ற முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னையில் இது­வரை 146 பேர் மருத்­துவ பரி­சோ­த­னையை மேற்­கொண்­டுள்­ள­தாக வட­மா­காண சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

விஷ ஊசி தொடர்பில் வட­மா­காண சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திக­தியும், இரண்டாம் வாரம் 9 ஆம் திக­தியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16 ஆம் திக­தியும், நான்காம் வாரம் 23 ஆம் திக­தியும், ஐந்தாம் வாரம் 30 ஆம் திக­தியும் புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யான முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னைகள் வட­மா­காண வைத்­தி­ய­சா­லை­களில் இடம்­பெற்­றன. அதில் யாழ். மாவட்­டத்தில் 29 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 24 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 81 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 05 பேரு­மாக 146 பேர் மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டுள்­ளனர். 

இதில் 2 ஆம் திகதி 26 பேரும், 9 ஆம் திகதி 47 பேரும், 15 ஆம் 16 ஆம் திக­தி­களில் 22 பேரும், 23 ஆம் திகதி 30 பேரும், 30 ஆம் திகதி 21 பேரும் மருத்­துவ பரி­சோ­த­னையில் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இதே­வேளை, எதிர்­கா­லத்தில் வாரத்தின் ஒவ்­வொரு வெள்ளிக்­கி­ழ­மையும் மேற்­படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.