Breaking News

ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ‘ஆவா’ குழுவின் ‘பிதாமகன்’ கோத்தா



சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

”மலினத்தனமான குற்றச்சாட்டுகளைத் சுமத்துவதை விட்டு, அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை அவர் சரியாக செய்ய வேண்டும். அபத்தமான கதைகளைக் கொண்டு வரக் கூடாது.

இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஆற்றல் எனக்கு இருக்குமேயானால், அதனை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.