Breaking News

ஆவா குழு குறித்த இரகசியத்தை வெளியிட்ட ராஜித

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தப்பின் போது வடக்கில் நடமாடும் ஆவா குழு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு அமையேவே அந்த குழு செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாறிய பின்னர் அந்த குழு, தற்போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, புதிய அரசாங்கம் ஏன் இன்னும் இந்த குழுவை அழிக்கவில்லை என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், அந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்