Breaking News

சம்பந்தன் குளுமாடு! தமிழ் மக்கள் அடிமாடுகள்!-கரிகாலன்(காணொளி)

அமெரிக்காவின் புதிய அதிபராகப்
பதவியேற்கப்போகும் ரொனால்ட் ட்ரம்பிடம் மைதிரிபால சிறிசேன சிறீலங்கா மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கடை அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம், எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமென தமிழ் மக்களுக்குச் சொல்லி வாக்குப்போட வைத்த சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் இதற்கு ஏதாவது மாற்றுக் கருத்துத் தெரிவித்தார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த சட்டத்தரணி கரிகாலன்.

தொடர்ந்து இவர் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஒற்றையாட்சிக்கெதிராகவோ, வடக்குக் கிழக்கு இணைப்புக்கெதிரா, பௌத்த மதத்திற்கெதிராக இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தெரிவித்திருந்தார். இதற்கு இரா.சம்பந்தன் ஏதாவது மறுப்புத் தெரிவித்தாரா? எனக் கேள்வியெழுப்பியதுடன், ஆக மொத்தத்தில் சிங்களவர்கள் கோயில் மாடுகளாகவும், சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் குழுமாடுகளாகவும், தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் அடிமாடுகள் எனவும் தெரிவித்துள்ளார்.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்