Breaking News

முல்லைத்தீவில் இராணுவத்தின் அம்பியூலன்ஸ் மோதி முதியவர் பலி(படங்கள்)


முல்லைத்தீவு வற்றாப்பளைப்பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவரை இராணுத்தினரின் அம்பியூலன்ஸ் மோதி அந்த இடத்திலேயே முதியவர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் தமிழ் கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வற்றாப்பளை பகுதியிலிருந்து முல்லைத்தீவுநோக்கி சென்றுகொண்டிருந்த ஆறுபிள்ளைகளின் தந்தையான கந்தப்பிள்ளை என்பவரே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இராணுவத்தினரின் வாகனம் என்பதால் பொலீஸார் அதனை அந்த இடத்திலிருந்து உடனடியாகவே அகற்றியதாகவும் அதனால் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்