Breaking News

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்: விஜயகலா



உலகத்திலேயே வீரம் மிக்க முதன்மையான தலைசிறந்த தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே விளங்குகிறார் எனத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று பிரதமராகியிருப்பாரென குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) கிளி.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நேர்மையாக செயற்பட்ட அரச அதிகாரிகளை கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பதவி நீக்கம் செய்து, வடக்கு மக்களுக்கான சலுகைகளையும் நிறுத்தியவர்கள் இன்று தங்களை தலைவர்களாக காட்டிக்கொள்வதற்கு முயல்வதாகவும் விஜயகலா இதன்போது குறிப்பிட்டார். எனினும், தாம் தேர்தல் வாக்குகளை குறிக்கோளாக கொண்டிராமல் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டே செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.