Breaking News

முகமாலை மக்களுக்கு எச்சரிக்கை..!!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, வெடிபொருள் ஆபத்தான ஏனைய பகுதிகளுக்குள் செல்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்ட ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் கிழக்கு பகுதி இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிக்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.