Breaking News

இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது: மோடி இரங்கல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!


அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி, தனது இரங்கலை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

"செல்வி ஜெயலலிதாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார் ஜெயலலிதா.

மக்களுக்காகவே யோசிப்பது, பெண்களுக்காக போராடுவது, ஏழைகளின் நலனுக்காகவே சிந்தித்தது போன்றவை எனக்கு மிகவும் ஊக்கம் அளிததது. இந்த துயரமான சம்பவத்தில், எனது எண்ணங்களும், ஆறுதல்களும், தமிழக மக்களுடன் இருக்கும்.

இந்த பெரும் துயரில் இருந்து அனைவரும் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை பல சமயங்களில் சந்தித்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அவரது ஆன்மா  சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் " என ட்விட் செய்து இருக்கிறார்.