Breaking News

வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் மரணம்

வவுனியாவில் விமானப்படை வீரர் ஒருவர் மது போதையில் மோட்டர் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா விமானப்படை தளத்தில் இடம்பெற்ற வருட இறுதி களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட விமானப்படை வீரர் ஒருவரே இதன் போது, உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது உயிரிழந்தவர் 31 வயதையுடைய அருனசாந்த் எனவும் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானப்பட வீரரின் சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.