Breaking News

ஜே.வி.பியின் தீர்வு யோசனையே தமிழர்களுக்கு ஏற்றதாம்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளை பின்பற்றியிருந்தால் தமிழர்களின் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு காணப்பட்டிருக்கும் என்றும் ஆகவே தாம் ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு முன்வைத்திருந்த யோசனைகளை பின்பற்றுமாறும் அரசுக்கு மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.


கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே தற்போதுள்ள அரசாங்கத்திற்கு காணப்படும் மிகவும் சவாலான விடயமென குறிப்பிட்டுள்ள சுனில் ஹந்துன்னெத்தி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் தீர்வானது நாட்டை பாதிக்கும் வகையிலோ மீண்டும் பயங்கரவாதம் உருவெடுக்கும் வகையிலோ அமைந்துவிடக் கூடாதென மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமது யோசனைகளை ஏற்று விரைவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமென சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.