Breaking News

முன்னாள் பிரதமரின் மரணம்: எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்க தினம்

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று (புதன்கிழமை) இத் தகவலை வெளியிட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வார காலமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க நேற்று காலை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதியன்று ஹொரணையில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.