Breaking News

தமிழர் தாயகத்தை துண்டு போட்டால் போர் வெடிக்கும்: கிளிநொச்சியில் எச்சரிக்கை



தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயற்படும் அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீசப்பட்டுள்ளதாக எமது கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துண்டுப் பிரசுரத்தில் ‘தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக தமிழர் தாயகத்தை துண்டுபோடுவதற்கு வாக்களிக்க கூடாது. வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும்!!’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

கிளி. கனபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அவை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.