Breaking News

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு சட்டவாளர் சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது.

மேல் நீதிமன்றத்தில் வழக்கை, ஜூரிகள் இன்றி மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.