Breaking News

இனியும் ஏமாறுவதற்கு தயாரில்லை; காணாமல் போனாரின் உறவுகள் ஆதங்கம்



காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன உறவுகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காணாமற்போனோரின் உறவினர்கள், கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள போதிலும் இதுவரை எந்தவொரு பதிலும் தமக்கு வழங்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

காணாமற்போன உறவுகள் குறித்து உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக காணாமற்போனோரது உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டபோதும், இதுவரை பாதிக்கப்பட்ட தமக்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையிலேயே, தீர்வு கிடைக்கும் வரையிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோர் தெரிவித்துள்ளனர்.