தொடரும் தவறுகள்! செல்வரட்னம் சிறிதரன்
போராட்டம் நடத்து வதற்கான ஜனநாயக வெளியை
ஏற்படுத்தியி ருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என் பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்
வடக்கில் காணி உரிமைகளுக்கான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூறச் செய்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களும் மேலும் மேலும் விரிவடைந்து செல்லத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அரசாங்கம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதிலோ அல்லது பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலோ ஆர்வம் காட்டிச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
இதனால், அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் நம்பிக்கையற்ற தன்மையும் தமிழ் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மோசமடைந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு போக்கையும் அவதானிக்க முடிகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைக்கு அரசாங்கம் முடிவு சொல்ல வேண்டும் எனக் கோரி நீண்ட நாட்களாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டமும் நீண்ட நாட்களாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசாங்கத்திலும் இத்தகைய போராட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அந்தப் போராட்டங்கள் அரசியல் கட்சிகளினாலும், அரசியல் தலைவர்களினாலுமே முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேநேரம் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டு பிடிப்பதற்கான சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்திருந்தன.
முன்னைய அரசாங்கத்தில் இந்தப் போராட்டங்கள் அச்சுறுத்தல்களுக்கும் பெரும் அச்சத்திற்கும் மத்தியிலேயே நடத்தப்பட்டிருந்தன. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர், அத்தகைய அச்சுறுத்தலும், அச்சப்படுகின்ற நிலைமயும் மாற்றமடைந்திருக்கின்றன. எதேச்சதிகார அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சிக்கான அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, மக்கள் எதிர்நோக்கியுள்ள எரிகின்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது
அதற்கேற்ற வகையில் தாங்கள் ஆட்சியமைத்தால், அரச படைகளினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் நடத்தப்பட்டதொரு ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கு பற்றியவர்களிடம் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
அதேபோன்று, ஆட்சி மற்றத்திற்காக வாக்களிக்குமாறு வேண்டிக்கொண்ட கட்சிகள், காணிப்பிரச்சினை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பொதுவான எதிர்பார்ப்பு ஒன்றை இன்று ஆட்சி பீடத்தில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது.
காணிப்பிரச்சினையானாலும்சரி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையானாலும்சரி அந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் பலரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டியவர்கள் வாய் மூடி மௌனிகளாகியிருக்கின்றார்கள். தீர்வுக்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியவர்களும் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக வெளி
முன்னைய அரசாங்கத்தில் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. எதேச்சதிகாரம் தலைதூக்கியிருந்தது. ஜனநாயகத்தையும் மக்களுடைய உரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவே ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசாங்கத்தை நாட்டு மக்கள் உருவாக்கியிருந்தார்கள்.
ஆனால், புதிய அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே செயற்பட்டால், அதனை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்காக உழைத்தவர்களும் தங்களால் ஆட்சிபீடம் ஏற்றப்பட்ட புதிய அரசாங்கம் எதிர்பார்த்தவாறு செயற்படாததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, கேப்பாப்புலவில் பிலவுக்குடியிருப்பில் உள்ள தமது காணிகளில் இருந்து விமானப்படையினர் வெளியேற வேண்டும் எனக் கோரி 25 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகக் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவராகிய விக்கிரமபாகு கருணாரட்ன இராணுவத்தின் பாவனையில் உள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து, தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவுமே நல்லாட்சி உருவாக்கப்பட்டது என்பதை நினைவூட்டியுள்ள அவர், அதற்கேற்ற வகையில் அரச தலைவர்கள் இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், புதிய அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறும்பட்சத்தில், புதிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் மக்கள் தயங்கமாட்டார்கள் என்று விக்கிரமபாகு கருணாரட்ன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் இவ்வாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதென்பதும், போராட்டங்கள் நடத்துவதென்பதும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஆனால் ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் நடத்துவதற்கு இப்போது இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஜனநாயக வெளி குறித்து அரசாங்கத் தரப்பினர் பெருமையோடு கருத்து வெளியிட்டிருக்கின்றனர். நல்லாட்சியில் மக்கள் தமது பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து போராட்டம் நடத்துவதற்கு வழி சமைக்கப்பட்டிருக்கின்றது,
இந்த ஜனநாயக உரிமையைப் பெற்றிருப்பவர்கள் கடந்த அரசாங்கத்தின் போது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றவாறாக அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.
போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக வெளியை ஏற்படுத்தியிருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.
அந்தப் பொறுப்பை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருக்கின்றது. தொடர்ந்தும் தவறி வருகின்றது என்பதையும் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
போராட்டம் நடத்த அனுமதித்திருக்கிறோம் தானே.....
காணிகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் பலதரப்பினரும், இந்த அரசாங்கத்தின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
ஆனால், உங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறோம் தானே, எனவே, நீங்கள் தாராளமாகப் போராட்டங்களை நடத்துங்கள். எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்கிறோம் என்ற போக்கிலேயே இப்போது அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.
கேப்பாப்புலவு பகுதி மக்களைப் போலவே, நிரந்தர நியமனம் கோரி, கொழும்பில் உள்ள சிறிலங்கா டெலிகொம் நிறுவன தலைமையகத்திற்கு எதிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராடி வருகின்றார்கள். அவர்களுடைய போராட்டம் 62 நாட்களாக நடந்து வருகின்றது. ஆனால் டெலிககொம் நிறுவனமோ அல்லது அரசாங்கமோ அதனை உரிய முறையில் இதுவரையில் கண்டுகொள்ள வில்லை.
அதேபோக்கில்தான் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு காணி விடயத்திலும் அரசாங்கம் பாராமுகத்துடன் செயற்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு காணி விடயத்தையும் அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை.
இந்த நிலையில், வவுனியா மாவட்டம் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விக்ஸ் காட்டுப்பகுதி என்ற இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்ற காணிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்காக மறைமுகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, அந்தப் பகுதி மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அதேவேளை, மலையகத்தில் தேயிலைத் தோட்டக் காணிகளைத் தனியாருக்கு – குறிப்பாக பெரும்பான்மை இன மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மலையக மக்கள் எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்ப்புக்குரல் அரசாங்கத்தின் செவிகளில் சரியான முறையில் விழவில்லை. அல்லது அந்த எதிர்ப்பை அறிந்தும் அறியாத முறையிலான போக்கில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை.
தமது எதிர்ப்புக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியிருப்பதையடுத்து, அந்த மக்களும் கேப்பாப்புலவு மக்களைப் பின்பற்றி, அதே பாணியில் தொடர்ச்சியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் போராட்டம் ஹுன்னஸ்கிரி தோட்டப்பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதாக உறுதியளித்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் மக்கள் தமது உரிமைகளுக்காகவும், பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும் வீதிகளில் இறங்கிப் போராடுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது அழகல்ல.
உண்மையான ஜனநாயகம் என்பது உரிமைகளுக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிப்பதுடன் நின்று விடுவதல்ல. மக்களுடைய உரிமைகளை சரியான முறையில் நிலைநாட்டுவதிலும், மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலுமே உண்மையான ஜனநாயகம் தங்கியிருக்கின்றது.
மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்கவிடாமல் தடுப்பதை நல்லாட்சி என்று கூற முடியாது. அவர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, அதற்காக அவர்களைப் போராடுவதற்கு அனுமதித்துவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதை உண்மையான ஜனநாயகம் என்று எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள்
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும், பொதுமக்களின் பொது நன்மைக்காகவும் எத்தனையோ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்களை ஈடு செய்திருக்க வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகளைச் செய்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்களினதும், பொதுமக்களினதும் நன்மைகளைக் கருத்திற்கொண்டு செயற்படத் தவறியிருந்தது.
புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்றும் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் நலன்சார்ந்ததிலும் பார்க்க, அரசாங்கத்தின் அரசியல் நலன் சார்ந்ததாகவும், அரச ஆதரவாளர்களின் நலன் சார்ந்ததாகவுமே அமைந்திருந்தன.
அந்த வகையிலேயே பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் புனரமைப்பு நடவடிக்கைகளிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல.., வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களும், வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கூலியாட்களும்கூட, முன்னைய அரசாங்கத்தினால் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக வங்கிகள் மட்டுமல்லாமல், எல்லா வகையான நிதிநிறுவனங்களும் மீள்குடியேற்றப் பிரதேச நகரங்களுக்குப் படையெடுத்து வந்து செயற்படுவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதித்திருந்தது. அதேபோன்று வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு முன்னுரிமை வழங்குவதைக் கைவிட்டு, வசதி படைத்த தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றப் பிரதேசங்களின் கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்களிலும் பார்க்க, தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.
இடப்பெயர்வு காரணமாக சொந்தக் காணிகளில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளின் வயல் நிலங்கள் தோட்டக்காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதற்கும், ஆட்களில்லாத வேளைகளில் அயல் பிரதேசத்தில் இருந்து வந்து விவசாயம் செய்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்குமே முதலிடம் வழங்கப்பட்டது, இதனால் உள்ளூரில் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியமர்ந்திருந்த மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல
ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை. பெரும்பான்மை இன மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் முன்னுரிமையும், முதலிடமும் அளிக்கின்ற போக்கு இன்னும் தொடர்கின்றது.
இத்தகைய நிலைமைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்தந்தப் பிரதேசங்களில் உள்ளவர்கள் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடவும், தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும். அதற்குரிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களின் காணிகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் மிக்க கட்டாய சூழல் இப்போது கிடையாது. தேசிய பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை போதாதென்று, உட்புறக் கிராமங்களில் விமானபப்டையினரையும் கடற்படையி னரையும்கூட அரசாங்கம் முகாம்களை அமை த்து நிலைகொள்ளச் செய்திருக்கின்றது.
இந்த வகையிலேயே–ஏ –9 வீதியில் மதவாச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையில் பூனாவை பகுதியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடற்பிரதேசம் அருகில் இல்லாத இந்தப் பிரதேசத்தில் கடற்படை முகாம் ஏன் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்களே புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
ஆங்கிலேயர் காலப்பகுதியிலேயே வவுனியாவில் விமான ஓடுபாதையொன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதனை இலங்கை இராணுவத்தினர் யுத்த காலத்தில் சீரமைத்துப் பயன்படுத்தி வந்தார்கள்.
அது இப்பொழுதும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணித்துப் பயன்படுத்தியிருந்தார்கள். அதனை இராணுவத்தினர் தமக்கு ஏற்ற வகையில் சீரமைத்துப் பயன்படுத்துகின்றார்கள்.
அதேபோன்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படைத்தளம் ஒன்றை அமைத்து விமானப்படையினர் செயற்பட்டு வருகின்றார்கள். யுத்த மோதல்கள் இல்லாத ஒரு சூழலில் இத்தகைய இராணுவ தளங்களும், இராணுவ வளங்களும் அவசியமில்லை என்பதே இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் கருத்தாக உள்ளது.
இராணுவ தேவைக்காக அத்தகைய வளங்களை உருவாக்குவதென்றால், தேவையான அளவில் அரச காணிகளும், காடுகளும் இருக்கின்றன.
அந்தப் பிரதேசங்களில் இராணுவம் தனக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்வதை விடுத்து, பொதுமக்களின் காணிகளை அத்துமீறி பிடித்து வைத்துக் கொண்டு அந்தக் காணிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடிப்பதும், அடாத்தான முறையில் நடந்து கொள்வதும் முறையான செயலல்ல என்பதே அந்த மக்களின் நிலைப்பாடாகும்.
இவ்வாறு மக்களுடைய நலன்களுக்கும், அவர்களுடைய நியாயமான கருத்துக் களுக்கும் முற்றிலும் விரோதமான முறையில் நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஜனநாயகமாகாது.
இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில், உண்மையான ஜனநாயக வழியில் மக்கள் தமது உரிமை களை அனுபவிக்கத்தக்க சூழலை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
ஏனெனில் முன்னைய எதேச்சதிகார அரசாங்கத்தின் போக்கிலேயே நல்லாட் சிக்கான அரசாங்கமும் நடந்து கொள்கின்றது என்ற மனப்பதிவு சிறுபான்மை இன மக்கள் மனங்களில் ஆழமாக ஏற்படுமாக இருந்தால், அது நாட்டின் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் இந்த நாட்டின் இரண்டு அதி முக்கிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து உருவாக்கியதே நல் லாட்சி அரசாங்கமாகும் இந்த அரசாங்கத் தின் மீது, மக்கள் நம்பிக்கை இழப்பதென்பது இந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழப்பதற்கு சமமாகும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
ஏற்படுத்தியி ருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என் பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்
வடக்கில் காணி உரிமைகளுக்கான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூறச் செய்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களும் மேலும் மேலும் விரிவடைந்து செல்லத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அரசாங்கம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதிலோ அல்லது பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலோ ஆர்வம் காட்டிச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
இதனால், அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் நம்பிக்கையற்ற தன்மையும் தமிழ் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மோசமடைந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு போக்கையும் அவதானிக்க முடிகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைக்கு அரசாங்கம் முடிவு சொல்ல வேண்டும் எனக் கோரி நீண்ட நாட்களாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டமும் நீண்ட நாட்களாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசாங்கத்திலும் இத்தகைய போராட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அந்தப் போராட்டங்கள் அரசியல் கட்சிகளினாலும், அரசியல் தலைவர்களினாலுமே முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேநேரம் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டு பிடிப்பதற்கான சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்திருந்தன.
முன்னைய அரசாங்கத்தில் இந்தப் போராட்டங்கள் அச்சுறுத்தல்களுக்கும் பெரும் அச்சத்திற்கும் மத்தியிலேயே நடத்தப்பட்டிருந்தன. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர், அத்தகைய அச்சுறுத்தலும், அச்சப்படுகின்ற நிலைமயும் மாற்றமடைந்திருக்கின்றன. எதேச்சதிகார அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சிக்கான அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, மக்கள் எதிர்நோக்கியுள்ள எரிகின்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது
அதற்கேற்ற வகையில் தாங்கள் ஆட்சியமைத்தால், அரச படைகளினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் நடத்தப்பட்டதொரு ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கு பற்றியவர்களிடம் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
அதேபோன்று, ஆட்சி மற்றத்திற்காக வாக்களிக்குமாறு வேண்டிக்கொண்ட கட்சிகள், காணிப்பிரச்சினை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பொதுவான எதிர்பார்ப்பு ஒன்றை இன்று ஆட்சி பீடத்தில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது.
காணிப்பிரச்சினையானாலும்சரி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையானாலும்சரி அந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் பலரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டியவர்கள் வாய் மூடி மௌனிகளாகியிருக்கின்றார்கள். தீர்வுக்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியவர்களும் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக வெளி
முன்னைய அரசாங்கத்தில் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. எதேச்சதிகாரம் தலைதூக்கியிருந்தது. ஜனநாயகத்தையும் மக்களுடைய உரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவே ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசாங்கத்தை நாட்டு மக்கள் உருவாக்கியிருந்தார்கள்.
ஆனால், புதிய அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே செயற்பட்டால், அதனை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்காக உழைத்தவர்களும் தங்களால் ஆட்சிபீடம் ஏற்றப்பட்ட புதிய அரசாங்கம் எதிர்பார்த்தவாறு செயற்படாததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, கேப்பாப்புலவில் பிலவுக்குடியிருப்பில் உள்ள தமது காணிகளில் இருந்து விமானப்படையினர் வெளியேற வேண்டும் எனக் கோரி 25 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகக் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவராகிய விக்கிரமபாகு கருணாரட்ன இராணுவத்தின் பாவனையில் உள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து, தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவுமே நல்லாட்சி உருவாக்கப்பட்டது என்பதை நினைவூட்டியுள்ள அவர், அதற்கேற்ற வகையில் அரச தலைவர்கள் இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், புதிய அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறும்பட்சத்தில், புதிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் மக்கள் தயங்கமாட்டார்கள் என்று விக்கிரமபாகு கருணாரட்ன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் இவ்வாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதென்பதும், போராட்டங்கள் நடத்துவதென்பதும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஆனால் ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் நடத்துவதற்கு இப்போது இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஜனநாயக வெளி குறித்து அரசாங்கத் தரப்பினர் பெருமையோடு கருத்து வெளியிட்டிருக்கின்றனர். நல்லாட்சியில் மக்கள் தமது பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து போராட்டம் நடத்துவதற்கு வழி சமைக்கப்பட்டிருக்கின்றது,
இந்த ஜனநாயக உரிமையைப் பெற்றிருப்பவர்கள் கடந்த அரசாங்கத்தின் போது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றவாறாக அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.
போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக வெளியை ஏற்படுத்தியிருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.
அந்தப் பொறுப்பை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருக்கின்றது. தொடர்ந்தும் தவறி வருகின்றது என்பதையும் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
போராட்டம் நடத்த அனுமதித்திருக்கிறோம் தானே.....
காணிகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் பலதரப்பினரும், இந்த அரசாங்கத்தின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
ஆனால், உங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறோம் தானே, எனவே, நீங்கள் தாராளமாகப் போராட்டங்களை நடத்துங்கள். எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்கிறோம் என்ற போக்கிலேயே இப்போது அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.
கேப்பாப்புலவு பகுதி மக்களைப் போலவே, நிரந்தர நியமனம் கோரி, கொழும்பில் உள்ள சிறிலங்கா டெலிகொம் நிறுவன தலைமையகத்திற்கு எதிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராடி வருகின்றார்கள். அவர்களுடைய போராட்டம் 62 நாட்களாக நடந்து வருகின்றது. ஆனால் டெலிககொம் நிறுவனமோ அல்லது அரசாங்கமோ அதனை உரிய முறையில் இதுவரையில் கண்டுகொள்ள வில்லை.
அதேபோக்கில்தான் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு காணி விடயத்திலும் அரசாங்கம் பாராமுகத்துடன் செயற்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு காணி விடயத்தையும் அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை.
இந்த நிலையில், வவுனியா மாவட்டம் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விக்ஸ் காட்டுப்பகுதி என்ற இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்ற காணிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்காக மறைமுகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, அந்தப் பகுதி மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அதேவேளை, மலையகத்தில் தேயிலைத் தோட்டக் காணிகளைத் தனியாருக்கு – குறிப்பாக பெரும்பான்மை இன மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மலையக மக்கள் எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்ப்புக்குரல் அரசாங்கத்தின் செவிகளில் சரியான முறையில் விழவில்லை. அல்லது அந்த எதிர்ப்பை அறிந்தும் அறியாத முறையிலான போக்கில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை.
தமது எதிர்ப்புக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியிருப்பதையடுத்து, அந்த மக்களும் கேப்பாப்புலவு மக்களைப் பின்பற்றி, அதே பாணியில் தொடர்ச்சியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் போராட்டம் ஹுன்னஸ்கிரி தோட்டப்பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதாக உறுதியளித்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் மக்கள் தமது உரிமைகளுக்காகவும், பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும் வீதிகளில் இறங்கிப் போராடுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது அழகல்ல.
உண்மையான ஜனநாயகம் என்பது உரிமைகளுக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிப்பதுடன் நின்று விடுவதல்ல. மக்களுடைய உரிமைகளை சரியான முறையில் நிலைநாட்டுவதிலும், மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலுமே உண்மையான ஜனநாயகம் தங்கியிருக்கின்றது.
மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்கவிடாமல் தடுப்பதை நல்லாட்சி என்று கூற முடியாது. அவர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, அதற்காக அவர்களைப் போராடுவதற்கு அனுமதித்துவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதை உண்மையான ஜனநாயகம் என்று எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள்
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும், பொதுமக்களின் பொது நன்மைக்காகவும் எத்தனையோ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்களை ஈடு செய்திருக்க வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகளைச் செய்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்களினதும், பொதுமக்களினதும் நன்மைகளைக் கருத்திற்கொண்டு செயற்படத் தவறியிருந்தது.
புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்றும் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் நலன்சார்ந்ததிலும் பார்க்க, அரசாங்கத்தின் அரசியல் நலன் சார்ந்ததாகவும், அரச ஆதரவாளர்களின் நலன் சார்ந்ததாகவுமே அமைந்திருந்தன.
அந்த வகையிலேயே பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் புனரமைப்பு நடவடிக்கைகளிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல.., வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களும், வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கூலியாட்களும்கூட, முன்னைய அரசாங்கத்தினால் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக வங்கிகள் மட்டுமல்லாமல், எல்லா வகையான நிதிநிறுவனங்களும் மீள்குடியேற்றப் பிரதேச நகரங்களுக்குப் படையெடுத்து வந்து செயற்படுவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதித்திருந்தது. அதேபோன்று வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு முன்னுரிமை வழங்குவதைக் கைவிட்டு, வசதி படைத்த தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றப் பிரதேசங்களின் கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்களிலும் பார்க்க, தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டது.
இடப்பெயர்வு காரணமாக சொந்தக் காணிகளில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளின் வயல் நிலங்கள் தோட்டக்காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதற்கும், ஆட்களில்லாத வேளைகளில் அயல் பிரதேசத்தில் இருந்து வந்து விவசாயம் செய்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்குமே முதலிடம் வழங்கப்பட்டது, இதனால் உள்ளூரில் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியமர்ந்திருந்த மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல
ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை. பெரும்பான்மை இன மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் முன்னுரிமையும், முதலிடமும் அளிக்கின்ற போக்கு இன்னும் தொடர்கின்றது.
இத்தகைய நிலைமைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்தந்தப் பிரதேசங்களில் உள்ளவர்கள் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடவும், தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும். அதற்குரிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களின் காணிகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்க வேண்டிய தேசிய முக்கியத்துவம் மிக்க கட்டாய சூழல் இப்போது கிடையாது. தேசிய பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை போதாதென்று, உட்புறக் கிராமங்களில் விமானபப்டையினரையும் கடற்படையி னரையும்கூட அரசாங்கம் முகாம்களை அமை த்து நிலைகொள்ளச் செய்திருக்கின்றது.
இந்த வகையிலேயே–ஏ –9 வீதியில் மதவாச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையில் பூனாவை பகுதியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடற்பிரதேசம் அருகில் இல்லாத இந்தப் பிரதேசத்தில் கடற்படை முகாம் ஏன் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்களே புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
ஆங்கிலேயர் காலப்பகுதியிலேயே வவுனியாவில் விமான ஓடுபாதையொன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதனை இலங்கை இராணுவத்தினர் யுத்த காலத்தில் சீரமைத்துப் பயன்படுத்தி வந்தார்கள்.
அது இப்பொழுதும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணித்துப் பயன்படுத்தியிருந்தார்கள். அதனை இராணுவத்தினர் தமக்கு ஏற்ற வகையில் சீரமைத்துப் பயன்படுத்துகின்றார்கள்.
அதேபோன்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படைத்தளம் ஒன்றை அமைத்து விமானப்படையினர் செயற்பட்டு வருகின்றார்கள். யுத்த மோதல்கள் இல்லாத ஒரு சூழலில் இத்தகைய இராணுவ தளங்களும், இராணுவ வளங்களும் அவசியமில்லை என்பதே இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் கருத்தாக உள்ளது.
இராணுவ தேவைக்காக அத்தகைய வளங்களை உருவாக்குவதென்றால், தேவையான அளவில் அரச காணிகளும், காடுகளும் இருக்கின்றன.
அந்தப் பிரதேசங்களில் இராணுவம் தனக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்வதை விடுத்து, பொதுமக்களின் காணிகளை அத்துமீறி பிடித்து வைத்துக் கொண்டு அந்தக் காணிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடிப்பதும், அடாத்தான முறையில் நடந்து கொள்வதும் முறையான செயலல்ல என்பதே அந்த மக்களின் நிலைப்பாடாகும்.
இவ்வாறு மக்களுடைய நலன்களுக்கும், அவர்களுடைய நியாயமான கருத்துக் களுக்கும் முற்றிலும் விரோதமான முறையில் நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஜனநாயகமாகாது.
இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில், உண்மையான ஜனநாயக வழியில் மக்கள் தமது உரிமை களை அனுபவிக்கத்தக்க சூழலை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
ஏனெனில் முன்னைய எதேச்சதிகார அரசாங்கத்தின் போக்கிலேயே நல்லாட் சிக்கான அரசாங்கமும் நடந்து கொள்கின்றது என்ற மனப்பதிவு சிறுபான்மை இன மக்கள் மனங்களில் ஆழமாக ஏற்படுமாக இருந்தால், அது நாட்டின் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் இந்த நாட்டின் இரண்டு அதி முக்கிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து உருவாக்கியதே நல் லாட்சி அரசாங்கமாகும் இந்த அரசாங்கத் தின் மீது, மக்கள் நம்பிக்கை இழப்பதென்பது இந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழப்பதற்கு சமமாகும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்