Breaking News

ஈழத்தமிழருக்காக பிரித்தானியாவிலும் வெடித்தது போராட்டம்(காணொளி)


எம் ஈழ மக்களின் வாழ்விடங்களை இராணுவ
பிடியில் இருந்து விடுவிக்க கோரியும் கேப்பாப்புலவு மக்களிற்கு ஆதரவு தெரிவித்தும் ஜெனீவாவில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை கண்டிக்கும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை படைகளால் அபகரிக்கப்ப
ட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்களை மீள கையளிக்குமாறும், அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்